உங்கள் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக........

Wednesday 11 August 2010

ருசிக்க தெரிந்தவர்

இரண்டாவது பதிப்பின்  மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.......

என்னுடைய குடும்பத்தில் குழந்தைகள் பட்டாளம்  கொஞ்சம் அதிகம்(ஹலோ........தப்பா நினைக்காதிக்க நான் என் அக்கா,அண்ணன்,தங்கச்சி,
மாமா,மச்சி எல்லோரின் குடும்பத்தையும் சேர்த்து சொல்றேன்)
அந்த குட்டி வாண்டுகளின் சேட்டைகளை பார்த்தால் ஐ...யோ!!!!!!!!!!சொல்லிமாலாது.அது நமக்கு கொஞ்சம் தொந்தரவை கொடுத்தாலும்
அவைகள் ரசிக்கும் படியாகவும்  இருக்கும். அப்படியான குறும்பு சேட்டைகளில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள
விரும்புகிறேன்.

   அதில் முதலாவது  ஒரு நான்கு வயது வாண்டுவின் லீலை,இவரை
கொஞ்சம் கவனகுறைவா விட்டுவிட்டா போதும் உடனே பஸ்
பின்னாடியே ஓடுறது, இல்லன்னா கல்லதூக்கி அடிக்கிறது இது போன்ற
கைவண்ணம் கட்டுவது  இவரின் வாடிக்கை எனவே இவனின் தொந்தரவு
தாங்கமுடியாமல் இவனின் அம்மா வீட்டுக்குள் அடைத்து வைத்துவிட்டு சாயங்காலம் ஆனால் அக்கம் பக்கத்து  வீட்டாருடன் பேசி அரட்டை
அடிக்க சென்று விடுவது வழக்கம்.இதுபோல் வீட்டில் அடைக்கபட்ட ஒரு
நாள் சாயங்காலம் இவர்(அதான்  நம்ம  கதாநாயகன்) ஒரு நாற்காலியை
இழுத்து அலமாரி அடுத்து போட்டு அதன்மேல் ஏறி அலமாரியில் உள்ள
சாமான்களை உருட்ட ஆரம்பித்திருக்கிறார் அது கொஞ்சம் போரடிக்கவே.
அப்புறம் அங்கு இருந்த யூகலிப்டஸ் தைலத்தின் பாட்டிலை திறந்து பதம் பார்த்துவிட்டார் (அதான் குடித்து விட்டார்)அது அவனுக்கு வாயும்,
வயுரும் எறியவே சத்தமிட்டு அழ ஆரம்பித்துவிட்டான்.உடனே ஓடி
வந்த அவனுடைய தாயாரும் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும்
அங்கு திறந்து கிடந்த பாட்டில்லை பார்த்து விட்டு பையன் பதம்
பார்த்ததை புரிந்து கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு ஓடினார்கள்.
பின்பு இறைவனின் உதவியால் ஆபத்தில் இருந்து டாக்டர் காப்பாற்றினார்.
அதன் பிறகு எல்லாம் சரி ஆனா பின் தன் தாயாரிடம் கேட்டான்
பாருங்க...... ஒரு சந்தேகம்.

  "உம்மா நான் அலமாரி மேலே இருந்த எல்லாத்தையும்(அவன் குறிப்பிடும் 
எல்லாத்தையும் என்பது ink,ஷாம்பூ,எண்ணை) குடிச்சி பார்த்தம்..மா!
ஆனா இதுமட்டும் ரெம்ப உரப்பா(காரம்மா)இருந்திச்சி ஏன்....ம்மா?"

அப்புறம் தான் தெருஞ்சிது  இவருக்கு தினசரி தொழிலே இதுதான் என்று.
அடுத்து என்னா அவரு வீட்டு காவலில் இருந்து விடுதலை பெற்றார்.

மீண்டும் வாண்டுகளின் ராஜ்ஜியம் தொடரும்.............................

குறிப்பு:-சம்பவம் படிப்பதற்காக சுவை ஏற்றப்பட்டுள்ளது   
                            

3 comments:

Unknown said...

நல்ல வேலை வீட்ல தண்ணி அடிக்கிற பார்ட்டி இல்ல போல இருக்கு.

Abdulcader said...

ஹா..ஹா..ஹா..ஹா...சரியான சிரிப்பு

வருகைக்கு நன்றி

Haameed said...

sripu sripa varuthu poga...........

Post a Comment

எதாவது பார்த்து போட்டுட்டு போங்க.

Related Posts with Thumbnails