உங்கள் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக........

Sunday 14 November 2010

உறவினர்களுடன் ஒட்டிவாழுங்கள், வெட்டிவாழாதீர்கள்

       இன்றைய பரபரப்பான உலகில் உறவினர்கள் என்று சொன்னாலே 
நம்மவர்கள் தலையில் காலடிக்க ஓடுகிறார்கள்.ஏதோ நாம் உண்டு நம் 
மனைவி,குழந்தைகள் உண்டு என்று வாழவிரும்புகிறார்கள்.ஏன் தங்கள் 
பெற்றோர்,அண்ணன் மற்றும் தங்கைகளை கூட உறவினர்களாக மதிப்ப
தில்லை."என் அண்ணனுடன் எனக்கு பல வருடங்களாக பேச்சுவார்த்தை 
இல்லை, என் தங்கையுடன்  பத்து வருடங்களாக ஒட்டும் இல்லை உறவும் 
இல்லை என்று பெருமையாகவே சொல்லிகொள்பவர்களும் சிலர் உண்டு".
இறை நம்பிக்கை உள்ளவர்களும் இதில் விதிவிலக்கல்ல.

ஆனால் நமது பதிப்பின் நோக்கம் இதை சுட்டி காட்டுவது அல்ல. இப்படி
உறவுகளை வெட்டிவாழ்பவர்களில் பெரும்பான்மையினர் அவர்கள் வெட்டி
வாழும் உறவுகளுடன் ஒட்டி வாழ விரும்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்
என்பதை தான்.ஆனால் அதற்கு தடையாக அவர்களுடைய ஈகோ என்னும்
தன்முனைப்பு (அகங்காரம்) இருக்கிறது என்பதுதான் நிதர்சனம். இவரை
கேட்டால் நான் ஏன் முதலில் பேசவேண்டும் அவர்தானே முதலில் 
என்னிடம் சண்டை இட்டுக்கொண்டார் எனவே அவர் என்னிடம் முதலில் 
பேசட்டும் என்று இவரும்.அவரை கேட்டால் நான் ஊரில் முக்கிய 
அந்தஸ்தில் உள்ளவன் நான் எப்படி முதலில் இறங்கிப்போய் அவனிடம் 
பேசமுடியும் என்று அவரும், ஆக  இருவரும் ஒருவருக்கொருவர் 
அவர்களின் மனதில் உள்ள ஈகோவுடன் இன்னும் பல வருடங்களாக
முகத்தை திருப்பிக்கொண்டு வாழ்வார்கள்.இதில் உள்ள வேடிக்கை 
என்னவென்றால் இவர்கள் பேசாமல் இருந்த காலத்தை விடபேச 
நினைத்தும் ஈகோவினால் பேசாமல் இருக்கும் கால அளவு தான் மிக  
அதிகமாக இருக்கும்.


எனக்கு தெரிந்த சில சகோதரர்கள் இப்படி தான் பல வருடங்களாக ஒட்டும்
இல்லை உறவும் இல்லை என்று இருந்தவர்கள் ஒரு சில மூன்றாவது நபர்
தலையிட்டு சமாதனப்படுத்தியதால் இன்று ஒட்டி உறவாடிவருகின்றனர்.
இதில் இன்னும் சிலரோ எத்தனை பேர்தான் சமாதானத்திற்கு வந்து இவர்
களை ஒட்டவைக்க நினைத்தாலும் வெட்டியேதான் நிற்போம் என்று
கொள்கையாக இருக்கிறார்கள்.இப்படிபட்ட பூனைக்கு மணிகட்டுவது யார்
என்று ஏங்கி இருக்கும் வேளையில் தான்....................
    
இதே இலக்கை கையில் எடுத்துக்கொண்டு ஒரு ஆலிம் (அறிஞர்)[இவர் அல்
ஜாமிஉல் அஷ்ஹர் என்னும் ஜூம்மா பள்ளியினுடைய கத்தீப் (சொற்பொழி
வாளர்)] களம் இறங்கினார்.அவர் சொற்பொழிவு ஆற்றும் வெள்ளிக்கிழமை
தொழுகை மேடையில் தொடர்ச்சியாக இரண்டு வார சொற்பொழிவில்
(சொற்பொழிவை செவியேற்க இங்கு கிளிக் செய்யவும் ஜூம்மா1, ஜும்மா2 )
அவர் குர்ஆனிலிருந்தும்,நபிமொழிகளிலிருந்தும், இது போன்ற செயல்கள் 
தவறு என்று ஆணித்தரமான ஆதாரங்களை கொட்டி மேற்படி ஆட்களின் 
இறைஅச்சத்தில் படிந்த தூசியை தட்டிவிட்டார்.அவர் நிகழ்த்திய உரையை 
கேட்ட உறவை முறித்து வாழும் சகோதரர்கள் ஒவ்வொருவரும் கத்தீப் 
(சொற்பொழிவாளர்) நம்குடும்ப பிரச்சனையை எப்படியோ தெரிந்து
கொண்டுதான் பேசுகிறார் என்று எண்ணும் அளவு பலவிதமாக அலசினார்.
அவ்வுரையை கேட்ட எனக்கும் என் நண்பர்களுக்கும் திருப்திகிடைத்தது.
முதல் வார சொற்பொழிவுக்கு பின்னரே எத்தனையோ சகோதரர்கள் தங்கள் 
விட்டுப்போன உறவுகளை புதுப்பித்துக்கொண்டார்கள் என்று பரவலாக 
செய்திவந்தது (அல்ஹம்துலில்லாஹ்) இறைவனுக்கே எல்லாபுகழும்.
இரண்டாவது வாரசொற்பொழிவிலும் தொடர்ந்தது அவர் பிரச்சாரம்.இதற்கு 
பின்னரும் பல சகோதரர்கள் தங்கள் விட்டுப்போன உறவை புதுப்பித்துக்
கொண்டனர்.இது நடந்து சில நாட்களுக்கு பின்னர் அந்த அறிஞரை 
சந்தித்து உரையாடும் வாய்ப்புக்கிடைத்தது.அப்பொழுது அந்த சொற்பொழிவு
களுக்கு பின்னர் ஊர் நிலவரம் எப்படி இருக்கிறது என்று கேட்டேன்.அதற்கு 
அவர் அந்த சொற்பொழிவுக்கு பின்னர் அவருக்கு வந்த தொலைபேசிகளை 
பற்றி சொன்னார்.எத்தனையோ சகோதரர்கள் தொடர்பு கொண்டு நானும் 
என் சகோதரரும் பல வருடங்களாக பேச்சுவார்த்தை இல்லாமல் 
இருந்தோம் உங்கள் உரைக்கு பின்னர் இருவரும் ஒன்று சேர்ந்து 
கொண்டோம் அதற்காக உங்களுக்கு நன்றி என்றும்,நானும் என்
சம்மந்தியும் பல வருடங்களாக ஒட்டுமில்லை உறவுமில்லை என்று
இருந்தோம் ஆனால் உங்கள் உரையை கேட்டுவிட்டு நாங்கள் போட்டி
போட்டு ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்லி இணைந்துவிட்டோம்.
அதற்காக உங்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறோம் என்றும்,இன்னும்
சில குடும்பங்கள் இணைந்து ஒருவர் மற்றவர்களுக்கு விருந்து உபச்சாரம்
எல்லாம் செய்து கொண்டதாகவும் சொல்லி நன்றி தெரிவித்துக்
கொண்டுள்ளதாகவும், இப்படியாக பல தொலைபேசிகள் வந்ததாக 
சொன்னார் அது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.          
       
சிந்திக்க சில நபிமொழிகள் :- 

தமது வாழ்வாதாரம் விசாலமாக்கப்படுவதும்,வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் 
யாருக்கு மகிழ்ச்சி  அளிக்குமோ அவர் தமது உறவை பேணி வாழட்டும்.
என்று முஹம்மது நபி(ஸல்) சொன்னார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி.

உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும்.ஆகவே "அதனுடன் யார் ஒட்டி 
வாழ்கின்றாரோ அவருடன் நானும் ஒட்டி உறவு பாராட்டுவேன்.அதை யார் 
வெட்டிக் கொள்கிறாரோ அவருடன் நானும் வெட்டிக் கொள்வேன்" (என்று 
உறவைப் படைத்த போது இறைவன் சொன்னான்).என்று முஹம்மது நபி 
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி.       

அல்லாஹ்விடம் உங்களில் சிறந்தவர் யார் என்றால் உங்களுக்குள் முதலில் 
ஸலாம் சொல்பவர்(அவர் உங்களை விட்டு முகத்தை திருப்பிக்கொண்டு 
சென்றாலும்)
நூல்: திர்மிதி. 

குறிப்பு:- இதை படிக்கும் நீங்களும் இது போன்ற உறவை முறித்துக்கொண்டு 
ஆனால் சேர்ந்துக் கொள்வதற்கு தயாராக இருக்கும் உங்களின் உறவினர்கள் 
மற்றும் நண்பர் களையும் உங்களின் தலைஈட்டினால்  சேர்த்துவைத்து 
இறைவனிடம் நன்மைகளை பெற்றுக்கொள்ளுங்கள். 

-----------------------------------------------------------------------------------------------------------
வருந்துகிறேன்.... 
மடிக்கணினியில் ஏற்பட்ட சில தொழில் நுட்ப கோளாறின் காரணமாக சில 
மாதங்களாக பதிவு ஒன்றும் போடாமல் இருந்தமைக்கு வருந்துகிறேன்.
-----------------------------------------------------------------------------------------------------------

6 comments:

எம் அப்துல் காதர் said...

நல்ல செய்தி சொன்னீங்க!

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்!!

Giri Ramasubramanian said...

நல்ல பதிவு. அவசியமான ஒன்றும் கூட. நன்றி.

உங்கள் தளத்தின் பின்னணியை சற்றே மாற்றினால் தேவலை. படிக்க கஷ்டமாக இருக்கிறதா என நீங்களே சோதித்துப் பாருங்கள்?

venkat said...

நல்ல பதிவு

Unknown said...

இன்றைய சூழ்நிலையில் அவசியமான பதிவு.. சிந்திக்க சில நபிமொழிகள் நல்ல தேர்வுகள்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

அந்நியன் 2 said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்,

Unknown said...

அருமையான பதிவு..

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்..

Post a Comment

எதாவது பார்த்து போட்டுட்டு போங்க.

Related Posts with Thumbnails