உங்கள் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக........

Tuesday 21 September 2010

ஒரு பழமையான கடலோர நகரம்

காயல்பட்டனம் என்ற கடற்கரை நகரமானது வங்காள விரிகுடா  கடலின்
தெற்கு கரையில் உள்ளது. இந்நகரம் மிக பழமைவாய்ந்த வரலாற்றை
கொண்டது  .

இவ்வூர் தமிழ்நாட்டின் தெற்கே தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூர்
எனும் ஊருக்கு 8 கி.மீ. தெற்கிலும், தூத்துக்குடிக்கு 32 கி.மீ. தொலைவிலும் கடலோரமாக அமைந்துள்ளது.இந்நகரம் தோன்றி ஏறத்தாழ ஐந்தாயிரம்
ஆண்டுகள் ஆகிவிட்டது என்று இந்நகரில் கிடைக்கப்பெற்ற தொல்
பொருள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பண்டைகால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை,பெத்திர மாணி
க்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் இன்றைய காயல்பட்டனம் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இன்னும் இது கபடபுரம் 
என்ற பெயரில் இரண்டாம் தமிழ்சங்கத்தின் தலைநகரமாகவும்
விளங்கியுள்ளது.
காயல்படனத்தில் கிடைக்கப்பெற்ற மிக பழமையான மண்பாண்டங்கள்  
இந்த நகரத்தின் வரலாற்றில் இங்குள்ள கடற்கரை மிக முக்கிய இடத்தை
பெறுகிறது. எந்த அளவு என்றால் இந்நகரம் உருவாக காரணமே !! இக்
கடக்கரைதான். எனவே இந்நகர மக்களின் வாழ்க்கையோடு இக்கடற்
கரை பின்னிப்பினைந்துக்கொண்டிருக்கிறது.

முற்காலத்தில் இந்நகரில் ஒரு பெரிய துறைமுகம் இருந்துவந்துள்ளது.
மேலும் முத்துகுளிப்பிலும்  இந்நகரம் சிறந்து விளங்கியுள்ளது. இத்துறை
முகத்திற்கு அரேபியா,கிரேக்கம், ரோம் மற்றும் சீனாவிலிருந்தும் வியா
பார போக்குவரத்துக்கள் இருந்துள்ளது. அதற்கான பற்பலசான்றுகள் இங்கு
காணகிடைகின்றன. அரேபியாவில் இஸ்லாம் உதிப்பதற்கு முன்பே
(முஹம்மது நபி தமது இஸ்லாமிய பிரச்சாரத்தை துவங்குவதற்கு
முன்பே) இந்நகர துறைமுகத்துடன் அரேபியர்கள்  வியாபார தொடர்பு
வைத்திருந்துள்ளனர். அரேபியாவிலிருந்து குதிரைகள்   மற்றும் பல
பொருள்கள் இறக்குமதிசெய்யப்பட்டு.இங்கிருந்து முத்துக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுவந்துள்ளது (அதற்கு எடுத்துக்காட்டாக இன்றும் இவ்வூரில்
பரிமார் தெரு என்று   ஒரு தெரு உள்ளது, பரி என்றால் குதிரை, மார்
என்றால் மாற்றம் அல்லது வியாபாரம்).
 

இப்னு பதுதா
மார்கோபோலோ

ரசிதுதீன்










 

பயணர்களான மார்கோ போலோ, இப்னு பதுதா, அப்துல்லா வசைப்,
ரஷிதுதீன் (பெர்சிய வரலாறு ஆசிரியர் )  போன்றவர்கள் இந்நகருக்கு
வருகைதந்துள்ளனர். இவர்களுடைய குறிப்பேட்டில் இந்நகரை பற்றிய
செய்திகளை குறிப்பிட்டுள்ளனர்.    

மார்கோபோலோ வருகையின்போது காயல்படன வரைபடம்  அமைப்பு  
 இந்நகரில் இஸ்லாமியர்கள் குடியேற்றமானது 7 வது நூற்றாண்டிலிருந்தே
துவங்கிவிட்டது. முஸ்லிம்கள் மூன்று கட்டங்களாக இந்நகரில் குடியேறி
யுள்ளனர்.

முதலாவது குடியேற்றம்

இஸ்லாத்தின் முதல் கலிபா ஹஜ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு
அவர்கள் காலத்தில் கி.பி. 633-ல் மாலிக் இப்னு தீனார் தலைமையில்
இஸ்லாத்தை பரப்ப ஒரு குழு கடல் மார்க்கமாக கேரளா வந்துசேர்ந்தது.
அதில் ஒரு பகுதியினர் காயல்பட்டணம் வந்து குடியேறி கடற்கரை
யோரமாக ஒரு பள்ளியைக் கட்டினர். இந்த கடற்கரை பள்ளிதான் இந்தியா
வின் இரண்டாவது பள்ளியும், தமிழ்நாட்டின் முதல்பள்ளியுமாகும்.
(தற்போது இப்பள்ளி கோசுமறை பகுதி அருகே புதையுண்டுள்ளது).
அப்பள்ளியின் அருகிலேயே இக்குழுவினர் குடியேறி வாழ்ந்து வந்தனர்.
பின்னர் கடலேறி இப்பகுதி புதையுண்டுவிட்டது.

இரண்டாவது குடியேற்றம்:

கி.பி;. 842ல் எகிப்து தலைநகர் கெய்ரோவில் கலீபா 'அல்வாதிக்' ஆட்சி
காலத்தில் இஸ்லாத்தின் முதல் கலிபாவான அபூபக்கர் அவர்கள் வம்சா
வழியைச் சார்ந்த முஹம்மது கல்ஜி அவர்கள் தலைமையில் ஒரு
குழுவினர் எகிப்தில் இஸ்லாத்திற்கு மாற்றமான முஃதஜிலா கொள்
கையை ஏற்க மறுத்து ஈமானை (இறைநம்பிக்கையை) காத்திட
ஹிஜ்ரத் எனும் நாடுதுறப்பு செய்து  கடல் மார்க்கமாக ஜயவீர ராஜ
காரு வேந்தர் காலத்தில் காயல்பட்டணம் வந்து சேர்ந்தனர். இவர்கள்
இந்நகரில் கி.பி. 843ல் ஜும்ஆ பெரிய பள்ளியை கட்டினர்.
பெரிய குத்பா  பள்ளி  

மூன்றாவது குடியேற்றம்:

முஹம்மது நபி அவர்கள் வம்சாவழியைச் சார்ந்த சுல்தான் ஜமாலுத்தீன்
அவர்கள் தலைமையில் பாண்டிய மன்னன் சுந்தர பாண்டிய தேவன்
ஆட்சி காலமான கி.பி.1284 (ஹிஜ்ரி737) ல் காயலில் வந்து குடியேறினார்.
இச் சமயத்தில் எகிப்தை முகம்மதிப்னு கலாவூன் ஆட்சி செய்திருந்தார்.
இவர்கள் ஜும்ஆ பெரிய பள்ளியை பிரமாண்டமாக விரிவுபடுத்தி கட்டி
னர். சுல்தான் ஜமாலுத்தீன் அவர்கள் பரம்பரையினர் பிரபுக்கள் என்று
அழைக்கப்படுகின்றனர்.(இன்னும் பிரபுக்கள் குடும்பத்தினர் இந்நகரில் வசித்துவருகின்றனர்)

மன்னர் அவர்கள், அரபி முஸ்லிம்கள்பால் மிகவும் அன்புடையவராக
இருந்தார். வியாபாரத்தில் பல சௌகரியங்கள் செய்து கொடுத்ததுடன்
நாட்டின் நிர்வாகத்திலும் பங்களித்தார். செய்யிது ஜமாலுத்தீன் அவர்
களின் சகோதரர் தகியுத்தீன் பாண்டிய மன்னரின் முதலமைச்சராக
நியமிக்கப்பட்டார். இவருக்குப்பின் இவரது மகன் ஸிராஜுத்தீனுக்கும்,
பின் அவரது பேரன் நிஜாமுத்தீனுக்கும் அப்பதவிகள் கிடைத்தது. சுந்தர
பாண்டிய தேவன் கி.பி. 1293ல் காலமான பின் செல்வாக்குடன் திகழ்ந்த
சுல்தான் செய்யிது ஜமாலுத்தீன் பாண்டிய நாட்டின் மன்னரானார். இச்
சமயத்தில் காயல்பட்டணம் அவரின் தலைநகரமாக விளங்கியது. அவர்
கி.பி.1306 (ஹிஜ்ரி706)ல் காலமானார்.

ஆதாரங்கள்:-

 1) An extract from The Travels of Marco Polo, Volume 2, by Marco Polo and Rustichello
of Pisa, et al, Edited by Henry Yule and Henri Cordier. (Marco Polo was a Venetian explorer
(now Italy) who lived between 1254 and 1324)
2) Translation of TAZJIYATU-L AMS�R WA TAJRIYATU-L �S�R - written by Abdullah
Wassaf - reportedly around 1300 AD. Extracts are taken from the book The History of
India, as Told by Its Own Historians: The Muhammadan Period written by Henry Miers
Elliot, John Dowson.
3) Translation of J�MI'U-T TAW�R�KH - written by Rashiduddin - reportedly around 
1310 AD. Extracts are taken from the book The History of India, as Told by Its Own
Historians: The Muhammadan Period written by Henry Miers Elliot, John Dowson.
4) Discovery of india by Pandit Jawaharlal Nehru.
5) History of Tinnevelly by Bishop Caldwell.

இந்நகரம் பழமை பழமை வாய்ந்ததற்கு எடுத்துகாட்டாக இன்னும் இங்கு
பல பழமையான பள்ளிவாசல்கள் உள்ளன. (விரைவில் காயல்படன
பள்ளிகளின் நிழல் படங்களை இங்கு காணலாம்). இன்னும் இந்நகரின் சில அமைப்புக்கள் எகிப்து கலாச்சாரத்தை ஒட்டியதாக உள்ளது. இப்பழம்
பெரும் நகரில் உள்ள பல சுவாரிஸ்யமான செய்திகளை அடுத்தடுத்த
பதிப்புகளில் காணலாம்.

இணைப்புச்செய்தி:-  

காயபட்டனம் என்ற பெயர் இவ்வூருக்கு வர இரண்டு காரணங்கள்
சொல்லப்படுகிறது. ஒன்று இவ்வூரின் அருகில் ஆறு (தாமிரபரணி)
கடலில் கலப்பதால் காயல் என்றும், கடல்சார்ந்த ஊர் என்பதால்
பட்டணம் என்றும், "காயல்பட்டணம்".ஆனதாக ஒரு செய்தியும்.

எகிப்தின் கெய்ரோ (அரபியில் காஹிரா) என்னும் இடத்திலிருந்து இவ்
வூருக்கு வந்து குடியேறிய மக்கள் இவ்வூரை அரபியில் "காஹிர்பதன்"
 என்று (பதன் என்றால் அரபியில் பட்டணம்)அழைத்துவந்ததாகவும் 
அதுவே காலஓட்டத்தில் மருவி "காயல்பட்டணம்" ஆனதாகவும் இன்
னொரு செய்தியும் இங்கு சொல்லப்படுகின்றது. (இப்னு பதுதாவின்
குறிப்பில்)     








15 comments:

Unknown said...

"காயல் பட்டணம்" என்கிற தன் சொந்த ஊரை பற்றிய பதிவை, மிக அழகாக வெளியிட்டு இருக்கிறீர்கள். பதிப்பு சிறப்பா வரணும்னு கொஞ்சம் அதிகமா மெனக்கெட்டது தெரியுது. வாழ்த்துக்கள்.

Unknown said...

இந்த ஊரிலே பிறந்த எனக்கு இந்த விஷயம் தெரியாது... சொந்த ஊரினை பற்றி அழகாகவும் விளக்கமாவும் சொல்லியிருக்கிங்க வாழ்த்துக்கள்

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும்,
காயல்பட்டினம் கடற்கரை
தெளிவான விளக்கம்.
கஞ்சி,வாடா ஸ்பெஷல்
சொல்லி இருக்கலாம்.

பொடுசு said...

பொறந்த ஊருக்கு புகழச்சேரு..

வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு..

என்ற பாடல் வரிகளுக்கேற்ப! பிறந்த ஊரின் பெருமையை உணர்வதும் பிறர்க்கு உணர்த்துவதும் நம் கடமையே. கடமையை தொடர்ந்து செய்யுங்கள். வாழ்த்துக்கள்.....

Ahamed irshad said...

நல்ல கட்டுரை..தெரிந்தது சில விஷயங்கள் தொடருங்கள்..

Unknown said...

வலைப்பதிவின் தலைப்பு வெகுஜோர்!!
காயலாங்கடை என்ற பெயரை பெற்ற வியாபாரமான பழைய இரும்பு தொழில் பற்றியும் விரைவில் வெளியிடுங்கள்.

எம் அப்துல் காதர் said...

ஏதோ கதை சொல்றீங்கன்னு வந்தா ஊர் சரித்திர மெல்லாம் சொல்றீங்க பெரிய ஆள் தான் சார் நீங்க!!

எம் அப்துல் காதர் said...

தமிழ் மணத்துல பதிவ சேர்த்தாலும் உங்க ஓட்டை நீங்க போடா மாட்டீங்களா பாஸ். என்ன நியாயம் இது?? தம்ப்ஸ் அப் ஸ்டைலில் விரல் உயர்த்தி இருக்கே அதை கிளிக் பண்ணினால் உங்க ஒட்டு விழும். சரியா??

Abdulcader said...

ஹரி @........

சரியா சொன்னீக கொஞ்சம் மெனக்கட வேண்டியதா தான் போச்சி, ஆனா ஊருல இப்போ இருக்கிறதால அதிகமான தகவல்கள் பெறட்ட முடிந்தது.

Abdulcader said...

சிநேகிதி @.....

உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது நன்றிகள்.

Abdulcader said...

ஆயிஷா அபுல் @........

அலைக்கும் ஸலாம்.....
உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
கஞ்சி,வாடா பற்றி விரைவில் பதிகிறேன்.

Abdulcader said...

பொடுசு @.....

செந்தில் உங்கள் வாழ்த்துக்கள் மன நிறைவை கொடுக்கிறது. சரி நீங்க எப்போ Achalpuram போறீங்க....

Abdulcader said...

அஹமது இர்ஷாத் @.....

உங்கள் வருகைக்கு நன்றி.

Abdulcader said...

shiak @.......

ஷேக் மாமா அவர்களே!! உங்கள் வருகை
மற்றும் வாழ்த்துக்கள்.எழுத்துலகில் எனக்கு
கிடைத்த அங்கீகாரமாக நினைக்கிறேன்.

உங்களை பின்பற்றிதான் நானும் எழுத ஆரம்பித்தேன்.நீங்களும் இந்த வலைபதிவு உலகத்திற்கு விரைவில் வரவேண்டும் என்று வரவேற்கிறேன்.

அப்புறம்....

எனக்கும் பழைய இரும்புகடையுக்கும் உள்ள தொடர்பு என்பது.அம்மாவாசைக்கும்,
அப்துல்காதருக்கும் உள்ள தொடர்பு போல.
சும்மா....பேருதான் காயலாங்கடை.

Abdulcader said...

எம்.அப்துல்காதர் @......

எதோ தெரிந்த செய்தியை சொல்லலாமுன்னுதான்........

அதுக்காக என்னை பெரிய ஆளுன்னு நினைக்காதிங்க நண்பா.

Post a Comment

எதாவது பார்த்து போட்டுட்டு போங்க.

Related Posts with Thumbnails